திருமணமான 2வது நாளே மனைவியை கொன்ற கணவன்! பழி வாங்க கூலிப்படையை ஏவிய பெண் வீட்டார்.. பரபரக்கும் மதுரை.,

Estimated read time 1 min read

மதுரை:

கர்ப்பிணி மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமினில் வந்தவரை கொல் வதற்காக பெண் வீட்டார் அரிவாளுடன் துரத்தி உள்ளனர். பெண் வீட்டார் துரத்தியதில் அலறி அடித்து ஓடியவர் உயிர் பிச்சைக் கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோதிமணி காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் ஆனதாகவும், கிளாடிஸ்ராணி வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் காதலியை கரம்பிடிக்க மனமில்லாத ஜோதிமணி திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

மிரட்டித் திருமணம்

கிளாடிஸ்ராணியை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் ஜோதிமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, மனமுமின்றி காதலித்த பெண்ணையே கரம்பிடித்தார் ஜோதிமணி. இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ஆன 2வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொல்லப்பட்ட நிலையில் முட்புதரில் சடலமாக கிடந்தார்.

மிரட்டித் திருமணம்

கிளாடிஸ்ராணியை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் ஜோதிமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, மனமுமின்றி காதலித்த பெண்ணையே கரம்பிடித்தார் ஜோதிமணி. இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ஆன 2வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொல்லப்பட்ட நிலையில் முட்புதரில் சடலமாக கிடந்தார்.

மர்ம கும்பல் துரத்தியது

நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் ஜோதிமணி. வழக்கம்போல் இன்று காவல்நிலையம் வந்த ஜோதிமணியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். அவரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வழிமறித்தது அந்த மர்மக் கும்பல். பின்னர் அவரை வெட்டுவதற்காக அரிவாளை தூக்கியபோது உடனடியாக அங்கிருந்து ஓடினார் ஜோதிமணி.

பழிக்குப்பழி

மர்மக் கும்பல் ஓட ஓட விரட்ட உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய ஜோதிமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். இதை பார்த்தவுடன் அரிவாளுடன் வந்த கும்பல் தப்பித்து ஓடியது. உடனடியாக போலீசார் துரத்தியபோதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. தன்னை மனைவியின் வீட்டார்தான் தீத்துக் கட்ட கூலிப்படை அனுப்பி உள்ளதாக ஜோதிமணி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours