தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

Estimated read time 1 min read

சென்னை:

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சட்டப்பேரவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-8-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது. ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி, இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. வழக்கைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours