சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதி!.,

Estimated read time 1 min read

சேலம்;

தமிழகத்தில் பரவிய ஒமிக்ரான் தற்போது மாவட்ட வாரியாக பாதிப்புகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது..

கொரானா நோய்தொற்று உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரஸ் ஆக பரவிவருகிறது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி தொடங்கி தமிழகத்திலும் காலூன்றி விட்டது. இதனடிப்படையில் சேலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 24 வயதுடைய சேலத்து பெண்மணி ஒருவர் சென்னையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் வந்து அவர் தனது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரசு மருத்துவமனையில் அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது லேசான பாதிப்புகள் மட்டுமே காணப்படுவதால் மேலும் தொற்று பரவாமல் இருக்க அவருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நியூசிலாந்தில் இருந்து வந்த 60 வயது ஆண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இவரது ரத்த மாதிரி தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது அவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருக்கும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  சேலத்தில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஒருவரும் அறிகுறியுடன் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours