Accident : லாரி மீது மோதிய கார்.! 3 பேர் துடிதுடித்து பலி.!!

Estimated read time 1 min read

ராணிப்பேட்டை: Accident

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்றது. இந்நிலையில், அதே சாலையில் அதி வேகமாக வந்த கார் லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு சிறுவன், 2 சிறுமிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours