`இருவர் ஒன்றான தருணம்!’- காதலியைக் கரம் பிடித்தார் `வானத்தைப் போல’ கார்த்தி! | vanathai pola serial actor karthi got married yesterday

Estimated read time 1 min read

`வானத்தைப் போல’ தொடர் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கார்த்தி. கார்த்தியும், காயத்ரியும் சமூகவலைதள பக்கங்களில் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். இருவரும் சேர்ந்து ரீல்ஸ்கள் பல பதிவிட்டு வந்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு `வானத்தைப் போல’ தொடர் நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் குறித்து கார்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ` இருவர் ஒன்றான தருணம்!’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அரவிஷ் - ஹரிகா

அரவிஷ் – ஹரிகா

அதே போல. நேற்று `சுந்தரி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் `அரவிஷ்’ஷிற்கும், `திருமகள்’ தொடரில் கதாநாயகியாக நடித்த ஹரிகாவிற்கும் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. அடுத்ததாக திருமண பந்தத்தில் இணைய இருக்கும் இந்த ஜோடிக்கும் பலர் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இரண்டு ஜோடிகளுக்கும் இனிய வாழ்த்துகள்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours