புத்தாண்டு தினத்தில் உச்சம் தொட்ட ஆணுறை விற்பனை.. அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்!

Estimated read time 0 min read

2022ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு
தடை விதித்திருந்த போதும் வீட்டிலேயே
கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம்
ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களின்
விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில்,
ஸ்விக்கி, ஸொமேட்டோ நிறுவனங்களில் 2
மில்லியனுக்கும் மேலான பிரியாணி ஆர்டர்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸொமேட்டோ நிறுவனம்
பங்குதாரராக உள்ள பிளின்கிட் தளம் மூலம்
மளிகை பொருட்கள், குளிர் பானங்களுடன்
ஆயிரக்கணக்கில் ஆணுறைகளும் ஆர்டர்
செய்யப்பட்டிருப்பதாக அதன் நிறுவனர்
தீப்பிந்தர் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி புத்தாண்டுக்கு முந்தைய நாள் 33,440
ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகவும்
அதில் ஒருவர் மட்டுமே 80 ஆணுறைகளை
வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்
குளிர்பானங்கள், 6,712 பாக்ஸ் ஜஸ்க்ரீம், 28,240 பாப்
கார்க் பாக்கெட்டுகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது வழக்கமாக 2 வாரங்களில் செய்யப்படும் டெலிவரிகள் ஒரே நாளில் நடந்திருப்பதாக தீப்பிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours