சேலம் மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா!!

Estimated read time 0 min read

சேலம்;

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 18 பேர், வீரபாண்டியில் 4 பேர், சேலம் ஒன்றியம் பகுதியில் 3 பேர், ஆத்தூர் நகராட்சியில் 2 பேர், காடையாம்பட்டி, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, தலைவாசல் பகுதியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 41 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள்
நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், கொரோனா பாதிப்புக்கு அரசு மற்றும் தனியார்
ஆஸ்பத்திரிகளில் 418 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours