திருச்சி மணப்பாறை அரியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களூக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!.,

Estimated read time 1 min read

திருச்சி:

திருச்சி மணப்பாறையில் பெய்த கனமழை காரணமாக அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களூக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9மணிவரை அதிக மழைப்பொழிவாக, அதாவது 274 .6mm மழையானது பெய்து, அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது.

எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரியாற்றின்  கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும்  மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours