Rajinikanth: கறிவிருந்து; கார்; `இராவணனால் இராமனுக்குக் கிடைத்த மரியாதை’ – மகிழ்ந்த ரஜினி | Jailer success meet: Rajinikanth’s Full Speech!

Estimated read time 1 min read

இதைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு BMW X7, நெல்சனுக்கும் அனிருத்திற்கும் Porsche என விலையுயர்ந்த கார்களைப் பரிசாக வழங்கினார். இது சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ரஜினி காந்த், தமன்னா, சுனில், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

நெல்சன், ரஜினி, கலாநிதி மாறன்.

நெல்சன், ரஜினி, கலாநிதி மாறன்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினி, “படத்தின் வெற்றிக்குப் பிறகு படத்தில் வேலைபார்த்த டெக்னீசியன்ஸ் எல்லோருக்கும் கறிவிருந்து போட்டு, எனக்கு, அனிருத்துக்கு, நெல்சனுக்கு விலையுர்ந்த கார்களைப் கலாநிதிமாறன் அவர்கள் பரிசளித்தார். அந்தக் காரில்தான் இங்கு வந்தேன். அந்தக் காரில் உட்கார்ந்து வரும்போதுதான் உண்மையில் நான் பணக்காரனாக உணர்ந்தேன். அதுமட்டுமின்றி, இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தங்க நாணயம் பரிசளித்துள்ளார் கலாநிதிமாறன். ஒருபடத்தின் வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு இந்தியாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours