இதுகுறித்து மேலும் பேசிய அவர், “கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ வழங்கியது தவறில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகைதான். இருப்பினும் அவர் வெறும் பத்து படங்கள் நடித்து முடித்தவுடனே அவர் அந்த விருதைப்பெற்றுள்ளார். ஆனால் நாங்கள் பல படங்களில் பணியாற்றியிருந்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கும் பெண் இயக்குநர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை. சில சமயங்களில், தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுகிறேன் என நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயசுதா தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours