சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றி எரிந்த கார்.. முழுவதுமாக எரிந்து நாசம்..!

Estimated read time 1 min read

நீலகிரி;

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

குன்னூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் குடும்பத்தினருடன் தனது ரெனால்ட் டஸ்டர் காரில் பெங்களூரு சென்றுவிட்டு இன்று, குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மரப்பாலம் அருகே சென்றபோது காரின் முன்பக்கம் புகை வந்துள்ளது. உடனடியாக சுதாரிதுக்கொண்ட தர்மராஜ், காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். aதனையடுத்து காரில் புகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கார் முழுவதும் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக தர்மராஜ் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் காரில் இருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours