நெல்லை அருகே மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ஆபாச மேசேஜ்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.,

Estimated read time 0 min read

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் (51). இவரது சொந்த ஊர் ஏமன்குளம். இவர் 11ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் கூறினார். மாணவிக்கு தலைமை ஆசிரியர் அனுப்பிய மெசேஜ், பள்ளி நிர்வாகத்துக்கு கிடைக்கவே கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை சஸ்பெண்ட் செய்தனர். நேற்று பாதிக்கப்பட்ட மாணவி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை தேடி வருகிறார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours