கேரள காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!.,

Estimated read time 0 min read

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி பகுதியிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கிருஷ்ணபிரியா என்ற பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

பின்னர் கிருஷ்ணபிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தகுமார்
கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ணபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
நந்தகுமார் நேற்று முன்தினம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, திடீரென கிருஷ்ணப்
பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார்.

இதைப்பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திடீரென நந்தகுமார் தன்னைதானே தீவைத்துக் கொண்டார். பின்னர் இருவரையும் மீட்ட அப்பகுதி
மக்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours