இன்று தங்கமணி.. அடுத்து எடப்பாடி.. முதல்வரின் பழைய கணக்கு இதுவா ?.,

Estimated read time 0 min read

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது நாமக்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2020ஆம் ஆண்டு  மார்ச் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி குடும்பம் ரூ.4.75 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோகரன்சி முதலீடு செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours