தமிழகத்தில் இன்று மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Estimated read time 1 min read

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.45 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 29,061 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 128 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும், ஈரோட்டில் 59 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 759 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 84,450-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,098 போ் உள்ளனா்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,513-ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours