ஓமலூர்: அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் நோயாளி

Estimated read time 1 min read

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகேயுள்ள ஒண்டி வீரனூர் கிராமம் பாரதிபுரத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி பாப்பாத்தி. இவர் வயிற்று பிரச்னை மற்றும் காய்ச்சலுக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனை கழிவறையில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours