விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.வீதி, எம்.ஜி.சாலை இடையே உள்ள பழமையான அய்யனார் கோவில் குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் அந்த குளம் வறண்டு காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன.