`எட்டு வருஷம் கழிச்சு கர்ப்பமானதும் பல விதமான விமர்சனங்கள் வந்துச்சு' – `சத்யா' ஶ்ரீவித்யா

Estimated read time 1 min read

சின்னத்திரையில் பரிச்சயமான முகம் ஶ்ரீவித்யா. வில்லியாக நடித்து பலரையும் மிரட்டியவர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான `சத்யா’ தொடரில் நடித்திருந்தார். அவரையும் அவரின் கணவர் அர்ஜூனன் கார்த்திக்கையும் அவர்களுடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். 

ஶ்ரீவித்யா

“எங்க ரெண்டு பேருக்கும் டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி இவர் கூட மூணார் ட்ரிப் போனேன். அது எனக்கு பர்சனல் ஃபேவரைட். `சத்யா’ தொடர் முடிஞ்சதும் ஒரு சின்ன பிரேக் கிடைச்சது. அப்ப ஒரு ட்ரிப் போயிட்டு வந்தோம். வந்ததும் விஜய் டிவியில் ஒரு புதிய தொடருக்கு செலக்ட் பண்ணியிருந்தாங்க. அந்த சமயத்துல கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சது. அந்த சமயம் ஒரு வருஷம் பிரேக் எடுத்துட்டு குழந்தை பிறந்ததுக்குப் பிறகு நடிப்பைத் தொடரலாம்னு தோணுச்சு. அதனால பிரேக் எடுத்துக்கிறேன்னு இவர்கிட்ட சொன்னேன். எப்பவும் எந்த முடிவா இருந்தாலும் என் விருப்பம் தான்… இருந்தாலும் அவர்கிட்ட பேச்சுக்காகவாச்சும் சொல்லணும்ல அப்படித்தான் சொன்னேன்.. அவரும் நான் நினைச்ச மாதிரியே ஓகே சொல்லிட்டார். பிறகு கமிட் ஆன சீரியல் டீமுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டேன். அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க. இப்ப குழந்தையோட நேரம் செலவிட்டுட்டு இருக்கேன்!” என்றவர் அவரின் கணவர் அர்ஜூனன் கார்த்திக்கை நமக்கு அறிமுகப்படுத்தினார். இவர் `சுறா’ படத்தில் அசோசியேட் கேமராமேன் ஆக இருந்தவர். இன்னும் பல படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். கார்த்திக் தொடர்ந்தார்.

“படத்துல ஒர்க் பண்ணிட்டு ஜீ தமிழ் சீரியல்களிலும் ஒர்க் பண்றேன். `சத்யா’ சீரியலில் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் ஒர்க் பண்ணோம். நான் பொதுவா இவங்களுடைய வேலையில் தலையிட மாட்டேன். பர்சனல் வேற, புரொபஷனல் வேற என்பதில் ரெண்டு பேருமே தெளிவா இருக்கோம்!” என்றவரைத் தொடர்ந்து ஶ்ரீவித்யா பேசினார்.

ஶ்ரீவித்யா

“செட்ல அவர் என்னை மேடம்னுதான் கூப்பிடுவார். நான் சார்னு தான் கூப்பிடுவேன். எப்பவும் சுற்றியுள்ளவங்க பேச்சைக் கேட்டுட்டு ஸ்ட்ரெஸ் ஆகிக்காம கணவன் – மனைவிக்குள்ள பேசி புரிதலோட இருந்தா போதும். லைஃப் நல்லா இருக்கும். எட்டு வருஷம் கழிச்சு கர்ப்பமானதும் பல விதமான விமர்சனங்கள் வந்துச்சுதான்! ஆனா, அதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டா நமக்குதான் ஸ்ட்ரெஸ். நாங்க அதை தவிர்த்துட்டு ஒருத்தருக்கொருத்தர் புரிதலோட இருந்தோம். இப்ப எனக்கு எட்டு மாசம் ஆகுது. நாங்க ரெண்டு பேரும் இந்த தருணத்தை செமையா என்ஜாய் பண்ணிட்டு இருக்கோம்!” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து இருவரும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours