Veera Zee Tamil Tv Serial Online Watch Today Episode March 19 | ராமச்சந்திரனால் பதறிப்போன கேசவன் வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Estimated read time 1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கேசவன் கண்மணியை தனியாக சந்தித்து பேச அவள் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வள்ளி மாறனுக்கு ஆரத்தி எடுத்து கொண்டிருக்க அங்கு வந்த ராமச்சந்திரன் ஆரத்தி தட்டை தட்டி விட்டு இவை என்ன பண்ணிட்டானு ஆரத்தி எடுக்குற என கோபப்படுகிறார். அடுத்ததாக கேசவ் மாறனிடம் கண்மணி கிட்ட பேசிட்டேன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிவிட்டதாக சொன்ன வள்ளி வேண்டாம், அந்தப் பொண்ணுக்கு ஆக்சிடென்ட் பண்ணது நீதானே தெரிய வந்த அப்புறம் வாழ்க்கை என்னாகிறது என்று கேட்க மாறன் அந்த விஷயம் நம்ம மூணு பேருக்கு மட்டும் தானே தெரியும் அதுவும் அந்த பொண்ணு ஆக்சிடெண்ட் பண்ணுது நான் தானு நெனச்சிட்டு இருக்கேன் அப்படி இருக்கும்போது எந்த பிரச்சனையும் வராது என பேசிக் கொண்டிருக்க ராமச்சந்திரன் கேசவனை கூப்பிட 3 பேரும் பதறிப் போகின்றனர். 

மேலும் படிக்க | Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..

ஆனால் எதுவும் கேட்காத ராமச்சந்திரன் கடைக்கு போலாம் என்று கூப்பிட இவர்கள் நிம்மதி அடைகின்றனர். பிறகு கேசவ் அப்பாவிடம் நான் கண்மணி கிட்ட பேசிட்டேன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொன்ன அதைக் கேட்டு அவரும் சந்தோஷப்பட வள்ளி நான் சொல்லி கேட்க மாட்டீங்களா என்று கோபப்பட ராமச்சந்திரன் கட்டிக்க போறது இவன், கல்யாணம் பண்ணி வைக்கப் போறது நான் இதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க அப்போ உங்களுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண நான் இந்த வீட்ல மூணாவது ஆளா போய்விட்டேன்ல, என கோபப்படுகிறார். மறுபக்கம் கண்மணி கல்யாணத்துக்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்ல வீரா என்னமோ உன் மனசுல ராஜேஷ் தான் இருக்கான் அப்படி இருக்கும்போது அவசரப்பட்டு முடிவெடுக்காத என்று அட்வைஸ் பண்ண கண்மணி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்கிறாள். 

மறுநாள் காலையில் ராமச்சந்திரன் வீட்டுக்கு வர வெளியில் கோலம் போடாமல் இருக்க வீட்டுக்குள் விளக்கேற்றாமல் இருக்க அத்தை எங்கடா என்று கேட்க கேசவன் அத்தைய காலையிலிருந்து காணத்தா கோச்சுக்கிட்டு எங்கேயோ போயிட்டாங்க போல என்று சொல்ல அவ எங்க போயிருப்பான்னு எனக்கு தெரியும் நீ வா என்று சொல்லி கேகசவனை கூட்டிக்கொண்டு கிளம்பி செல்கிறார். வள்ளி கோவிலில் புலம்பிய வர உட்கார்ந்து இருக்க முதலில் அங்கு வரும் மாறன் இப்ப புலம்பி என்ன பிரயோஜனம் அப்போது காதலிச்சவனையே கல்யாணம் பண்ணி இருந்தா என்ன அர உனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும் அந்த பொண்ணு நான் டாவடிச்சிருப்பேன் என கலாய்த்து வீட்டுக்கு கூப்பிட வள்ளி வர மறுக்கிறாள். 

அதன் பிறகு ராமச்சந்திரன் அங்கு வந்து இவங்க அம்மா இறந்த போது நான் உடைந்து போயிருந்தேன் நீ தான் நான் இருக்கேன் அண்ணே என ஆறுதலா இருந்த, இவங்களுக்கு அம்மாவா இருந்து பாத்துகிட்ட, எனக்கும் ஒரு அம்மாவா இருந்த என்று சொல்ல வள்ளியின் மனம் மாறுகிறது. கோபம் குறைகிறது. பிறகு வீராவின் வீட்டில் கண்மணிக்கு பூ வைப்பதற்காக ராமச்சந்திரன் வீட்டிலிருந்து வர உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கண்மணி வேண்டா வெறுப்பாக தயாராக வீரா அட்வைஸ் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அந்நியன் படத்தில் வந்த குட்டி அம்பி நடிகர் விஜய்யின் தம்பியா!? சொல்லவே இல்ல…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours