அவ்வப்போது புது புது போட்டோ ஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வந்தாலும் நெடுநாள்களாக அமைதியாகவே இருந்தார் சரவணன். விரைவில் அடுத்த படம் என்று மட்டும் சொல்லி வந்தனர். இந்நிலையில்தான் அவர் இப்போது மீண்டும் ஹீரோவாகத் திரும்பி வருவது உறுதியாகியிருக்கிறது. இந்த முறை அவரை இயக்குபவர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார். இதற்கு முன்னால் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கி இருப்பவர். சூரி, சசிகுமார் நடிப்பில் அவரின் ‘கருடன்’ படம் இப்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

செந்தில்குமார் சொன்ன கதை லெஜண்ட் சரவணனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. இதற்கு முன் எவ்வளவோ கதைகளைக் கேட்டிருந்தாலும் இந்தக் கதையைத்தான் அவர் மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தாராம். அதனால் கதையை ஓகே செய்து, செந்தில்குமாரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்.
+ There are no comments
Add yours