கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், இந்திய சினிமாவில் திரைப்படங்கள், ஆவணப்படங்களில் பணியாற்றி இந்தியாவின் பெருமை மிகுந்த ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் 12 தேசிய விருதினையும், நான்கு கேரள அரசின் விருதையும், மூன்று தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.
குறிப்பாக ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றிய ‘ரோஜா’, ‘தளபதி’, ‘உயிரே’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவை. பல திறமையான ஒளிப்பதிவாளர்களை உருவாக்கியவர். இப்படி சிறந்த ஒளிப்பதிவாளராக, இயக்குநராக வலம் வந்த சந்தோஷ் சிவனுக்கு இவ்விருது மூலம் இப்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துகள் சந்தோஷ் சிவன்
+ There are no comments
Add yours