`தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தின் கதையை நான் எழுதியுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. அதில் உண்மையில்லை. அந்தப் படம் தனுஷின் கனவுப் படைப்பு. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே!’ என்று தெரிவித்துள்ளார் செல்வா. இந்நிலையில் ‘ராயன்’ படத்தைப் பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
‘ராயன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது அடுத்த படமான ‘டி51’ படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு வரும் வாரத்தில் மீண்டும் அங்கே நடக்கிறது. ‘ராயன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா, செல்வராகவன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது. இப்படத்தின் கதையைப் பற்றி விசாரித்தால், வட சென்னையில் இரவு நேர உணவுக் கடையில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார் ராயன். ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய உண்மை தெரிய வரும்போது, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். கேங்ஸ்டராக இருந்தவர்தான் இப்போது அமைதியின் வடிவமாக சமையல்காரராக இருந்துள்ளார் என்று தெரிகிறது.
+ There are no comments
Add yours