No Eviction In Bigg Boss 7 Tamil This Week Here Is The Reason Why

Estimated read time 1 min read

தமிழ் ரசிகர்களை அதிகம் கொண்ட பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்போட்டியின் இந்த வார எவிக்ஷன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7:

இந்தி மொழியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் போட்டி ஒளிபரப்பாகி வருகிறது. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. எப்போதும் சின்னத்திரை அல்லது பெரிய திரையில் ஒரளவு தெரிந்த முகங்களை மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுப்புவர். ஆனால் இந்த முறை, டிஜிட்டல் உலகில் பிரபலமாக உள்ளவர்கள் கூட போட்டியாளர்களாக களமிறங்கினர். அதில் சிலர் பலமானவர்களாகவும் உள்ளனர். அனைத்து சீசன்களிலும் பிக்பாஸ் போட்டியின் விதிமுறைகள் மாற்றப்படும். இந்த முறையும் அவ்வாறு புது ரூல்ஸ்கள் கொண்டு வரப்பட்டன. பிக்பாஸ் வீடே இந்த சீசனில் இரண்டானது. இதுவரை கொடுக்கப்படாதன ரெட் கார்டு, இந்த சீசனில் வழங்கப்பட்டது. நம்பிக்கையான போட்டியாளர்களாக கருதப்பட்ட சிலர், பின்னர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

மேலும் படிக்க | கணவரின் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

இந்த வார எவிக்ஷன்..

பிக்பாஸ் போட்டியில் அனைத்து வாரங்களிலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்களுக்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும். சேனல் குறிப்பிடும் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தோ, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருக்கும் ஆப்ஷன் மூலமாகவோ தங்களுக்கு விருப்பப்பட்ட போட்டியாளருக்காக மக்கள் வாக்களிப்பர். ஆனால், மிக்ஜாம் புயலால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பல லட்சம் பேருக்கு நெட்வர்க் கிடைக்கவில்லை. இதையடுத்து, பல பேர் வாக்களிக்க முடியாத காரணத்தால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் போட்டியை ஒளிபரப்பு செய்யும் சேனல் அறிவித்துள்ளது. 

கடந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்..

பிக்பாஸ் போட்டி முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. தற்போது இப்போட்டி 50 நாட்களை தாண்டியுள்ள நிலையில், இதில் இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று நினைத்த சிலர் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஒருவர், ஜோவிகா விஜயகுமார். ஆரம்பத்தில் மிகவும் தனிச்சையாகவும் துடிப்புடனும் விளையாடி வந்த இவர், கடந்த சில வாரங்களாக கேங்குடன் சேர்ந்து விளையாடி வந்ததாக ரசிகர்கள் மத்தியில் இருந்து கருத்துகள் எழுந்தன. அது மட்டுமன்றி, இவர் தன் வயது குறித்தும் தனது படிப்பு குறித்தும் விவாதங்களின் போது பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. போதாக்குறைக்கு “ஜோவிகா” எனும் தனது பெயரை “ஜேபவிகா” என்று தமிழில் எழுதியதும் பெரிய மீம் மெட்டீரியலாக மாறியது. இதனால், ஜோவிகாவிற்கு என்றிருந்து ரசிகர்கள் கூட்டமும் குறைய தொடங்கியது. இது, அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | வீட்டில் சிறுத்தையை வளர்த்த ‘அந்த’ நடிகை! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours