Acted amidst various challenges: Aathmika

Estimated read time 1 min read

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடித்த படம்: ஆத்மிகா

3/16/2023 2:03:12 PM

சென்னை: உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. நாளை திரைக்கு வரும் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஆத்மிகா கூறியதாவது:  ஒவ்வொரு நடிகைக்கும் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கொண்ட கேரக்டர் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ‘கண்ணை நம்பாதே’ எனக்கு அதுபோன்ற ஒரு படம் என்று சொல்லலாம். இது என் திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும். இயக்குனர் மு.மாறன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகு, முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவரது எழுத்தாற்றலில் காணப்பட்ட நேர்த்தி மற்றும் அதையே காட்சி அனுபவமாக மாற்றிய யுக்தி அபாரமானது. உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இப்படத்தை அவர் நடித்து முடித்துள்ளார். படத்தில் தனது கேரக்டருக்கு அவர் நியாயம் செய்துள்ளார். ‘கண்ணை நம்பாதே’ படம் அனைத்து கேரக்டர்களுக்கும் சம முக்கியத்துவம் தரும் படம். இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours