முன்னணி இயக்குநர்கள் பலரது பெயர்களும் ஒரு ரவுண்டு வந்தது. அதன் பின் இப்போது அட்லி, திரிவிக்ரம், அ.வினோத் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி வருகிறார்கள். இதற்கு முன் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மாலினேனி உட்படப் பலரும் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கின்றனர். இதில் வெற்றிமாறன் ஏற்கெனவே ‘விடுதலை 2’, ‘வாடிவாசல்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவு.
அதைப்போலத் தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படத்தை இயக்கியிருந்தார். அது சுமாராக மட்டுமே ஓடியது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் பல்ஸ் தெரிந்த கோலிவுட் இயக்குநர் இயக்கினால்தான் சரியாக இருக்கும் என்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். அட்லி, அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் என்ற பேச்சு இருக்கிறது. ஆகையால், அல்லு அர்ஜுனின் கால்ஷீட்டைப் பொறுத்து, அட்லி இயங்குவார். ஆனாலும் விஜய்க்கான கதை அட்லியிடம் தயாராகவே இருக்கிறது.
+ There are no comments
Add yours