Actor Dhanush New Movie Update | சிவகாரதிக்கேயன் பட இயக்குநருடன் இணையும் தனுஷ்.. இதோ அப்டேட்

Estimated read time 1 min read

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் : ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கிற படத்தை இயக்கி வரும், நிலையில் தற்போது அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ் (Actor Dhanush). கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கியிருக்கி வருகிறார். இதையடுத்து தனது 50வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே எழுதி இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். மேலும் ராயன் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை தனுஷ் படமாக்கினார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் சூழலில் இந்தப் பாடல் காட்சியில் பிரியங்கா மோகன் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதை அடுத்து ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் படிக்க | சன் டிவி சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

தனுஷ் 51:
இதனிடையே சமீபத்தில் 51வது படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சமீபத்தில் குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படம் மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் இயக்குனருடன் அடுத்த படம்:
இந்நிலையில் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் நிலையில், கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பிலேயே அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் கூட்டணியிலும் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | Goundamani: எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி! எந்த படத்திற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours