Pa.Ranjith: “`மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தோட வெற்றிக்குக் காரணம் இதுதான்!” – இயக்குநர் பா.இரஞ்சித் | Producer and Director Pa. Ranjith speech at J. Baby movie audio launch

Estimated read time 1 min read

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “வெங்கட் பிரபு சார் என்னுடைய ‘அட்டகத்தி’ படத்துக்கு ஆதரவு தெரிவிச்சாரு. இப்போ சுரேஷ் மாரி அண்ணனோட படத்துக்கும் ஆதரவு கொடுக்க வந்திருக்கார். சினிமாவுல நான் முதன்முதல்ல ஒரு படத்துல வேலை பார்த்தேன். அதை வச்சு சினிமா இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு பிறகுதான் ‘சென்னை 28’ படத்துல வேலை பார்த்தேன். ஜாலியாக இப்படியான வழிகளிலும் வேலை பார்க்க முடியும்னு எனக்குச் சொல்லி கொடுத்தது வெங்கட் பிரபு சார்தான். நான் சினிமாவுக்குள்ள வரும்போது எனக்குத் திருமணமாகவில்லை. ஆனா, இயக்குநர் சுரேஷ் மாரி சினிமாவுக்குள்ள நுழையும்போதே அவருக்குன்னு ஒரு குடும்பம் இருந்தது.

Pa.Ranjith | பா.இரஞ்சித்

Pa.Ranjith | பா.இரஞ்சித்

சினிமாவுக்குள்ள இருக்கும்போது குடும்பச் சூழல் பத்தி யோசனை இருக்கும். வேலையைச் சரியாக பார்க்காம இருந்தால் குடும்பத்தை ஒரு காரணம் சொல்லுவாங்க” என்றவர்,

“சுரேஷ் மாரி அண்ணனோட முதல் படமே போதைப் பொருள்களை மையமாக வச்சு நகரக்கூடிய கதைக்களம். இந்தப் படம் போதைப் பொருளைப் புனிதப்படுத்துற மாதிரி ஆகிடும்னு நீலம் பேனர்ல இதைப் பண்ணமுடியாதுனு சொன்னேன். அதுக்கு பிறகு இந்தப் படத்தோட கதையை எனக்குச் சொன்னார். எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடிச்சது. உறவுகளைப் பத்தி பேசுற படம், நிச்சயமாக நீலம் பேனர்ல பண்ணலாம்னு சொன்னேன். எனக்கு இந்தத் திரைப்படம் எப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே மாதிரி எல்லோருக்கும் தாக்கத்தை உண்டாக்கும்” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours