Amaran: "அவரது நினைவைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்!" – மேஜர் முகுந்த் மனைவி உருக்கம்

Estimated read time 1 min read

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசத்திற்காக வீர மரணமடைந்த மேஜர் முகுந்த்தின் கதையைத் திரையில் காண அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மேஜர் முகுந்த்தின் மனைவி இந்து, ‘அமரன்’ படம் குறித்து உருக்கத்துடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்துவின் பதிவு

இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமரன்… என்னுள் எப்போதும் நிறைந்திருக்கும் ஒரு பெயர். இதை எப்படிச் சொல்வது என்று நான் ஆயிரம் முறை யோசித்திருக்கிறேன்.

ஒரு தசாப்தம் கடந்துவிட்ட நிலையில் அவரது நினைவையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் பார்ப்பதற்கான நேரம் இது. அழியாதத் துக்கம், எல்லையற்ற அன்பு மற்றும் மாறாத நம்பிக்கை கலந்த உற்சாகத்துடன் இப்படத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் குடும்பம் மற்றும் இதேபோல ஓர் அன்பான ஆத்மாவை ஓர் உயர்ந்த காரணத்திற்காக இழந்த அனைவருடனும் துக்கம், அதே சமயம் வலிமையுடன் துணை நிற்கிறோம். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “என்னையும் எங்கள் குழுவையும் நம்பி இந்தப் பெரிய பொறுப்பைக் கொடுத்த இந்து ரெபேக்கா மேம் அவர்களுக்கு நன்றி. மேஜர் முகுந்த வரதராஜன் சார் மற்றும் அவரது குடும்பத்தாரின் தன்னலமற்ற சேவைக்காக என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்!” என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours