அடுத்து எழுந்த விஷ்ணு, “என் டார்ச்சரைத் தாங்கிக்கற பாய்ஸ் டீமை கூட்டிட்டுப் போவேன்” என்று மணி, தினேஷ், விஜய்யை சொன்னது எதிர்பார்த்ததுதான். “ரெண்டு ஸ்பெஷலான இடம் இருக்கு. அதுக்கு அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ராவைக் கூட்டிட்டு போவேன்” என்றார் மாயா. அடுத்து எழுந்த மணி “புலம்பல் ராஜா விஷ்ணு, ஆர்வக்கோளாறு தினேஷ், ஃபெர்ஃபெக்ட் பிளான் விஜய்” என்று பட்டப்பெயர் வைத்துச் சொன்னார். இதில் ரவீனா இல்லாமலா? அவரோடு கூல் சுரேஷூம் இருப்பாராம்.
இந்த டாஸ்க்கில் அனைவரும் தங்களுக்குச் சௌகரியமான நட்புகளையே சொன்ன போது பூர்ணிமா மட்டும் வித்தியாசமாக எதிர் குரூப்பைச் சொன்னது சுவாரசியம். “இவங்க கூடல்லாம் நல்லா பழகிட்டேன். ஆனா வீட்டுக்கு வெளில அவங்க எப்படி இருக்காங்கன்னு பார்க்கணும்” என்று விஷ்ணு, தினேஷ், மணி ஆகியோரைச் சொன்னார் பூர்ணிமா. (விஷ்ணுவா?! என்ன இருந்தாலும் அந்த ஜெஸ்ஸி… இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறார் போல!) ஆனால் இதை பூர்ணிமா விவரித்த முறைதான் பயங்கரமாக இருந்தது. “மூணு பேரையும் கூட்டிக்கிட்டு மேப்லயே இல்லாத எங்காவது காட்டுக்குள்ள போகணும்” என்று போட்டுத்தள்ளுவது மாதிரியே சொல்லிக் கொண்டிருந்தார்.
பெட்டியை எடுக்க முடிவு செய்த பூர்ணிமா
பூர்ணிமா சொன்னது சர்காஸ்டிக் என்றாலும் மாயாவும் விசித்ராவும் அதை ரசிக்கவில்லை. “என்னது… காட்டுக்கு போகணுமா. ஏன் பூர்ணிமா ஏன்… நாங்கள்லாம் கூட வந்தா ஆகாதா?” என்று உரிமையோடு கேட்டார் விசித்ரா. “அவ்ளோ பெரிய மன்மதனா அவன்? நீயா ஏன் திரும்பத் திரும்ப போற?” என்று விஷ்ணு குறித்து எரிச்சலானார் மாயா. இது விஷ்ணுவின் காதில் விழுந்து விட்டது போல. “நான் மன்மதனும் கிடையாது. இவங்க ஒண்ணும் ரம்பை ஊர்வசியும் கிடையாது. கம்முன்னு இருந்தா வந்து வந்து நோண்டறது” என்று முனகினார். ஏன் மாயாவிடம் போய் சண்டையிடவில்லை?
+ There are no comments
Add yours