Bigg Boss 7 Day 30: `நீ அவனை லவ் பண்ணு!’ – பிரதீப் தந்த பகீர் ஐடியா; அவர் விளையாடுவது சரியா?|Bigg Boss 7 day 30 Highlights

Estimated read time 1 min read

பிரதீப் பேசிய ‘பீப்’ வார்த்தைகள்

‘இந்த ரவுண்டில் யார் யாரெல்லாம் அவுட் என்று சொல்லுங்க’ என்று பிக் பாஸ் கேட்டார். ‘எந்த ஒரு போட்டியின் முடிவையும் சக போட்டியாளர்கள்தான் சொல்ல வேண்டும்’ என்பது இந்த ஆட்டத்தில் உள்ள ஒரு சூட்சுமம். அப்பொழுதுதான் போட்டியாளர்களுக்குள் விரோதம் ஏற்பட்டு சண்டையும் சர்ச்சையும் வெற்றிகரமாக ஏற்படும். பிக் பாஸ் இதை அறிவித்தால் சுவாரஸ்யம் இருக்காது. போட்டியாளர்கள் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள்.

இந்தச் சுற்றில் தோற்றவர்களின் வரிசையில் பிரதீப்பின் பெயரையும் சுரேஷ் சேர்த்த போது, பிரதீப் இதை கடுமையாக ஆட்சேபித்தார். அப்பொழுது அவரின் வாயில் தன்னிச்சையாக ஒரு பீப் வார்த்தை வந்ததை உணர்ந்த அடுத்த கணமே வாயில் அடித்துக் கொண்டார். சபையில் கெட்ட வார்த்தை சொன்னதால் விஷ்ணுவிற்கு கோபம் வர, பிரதீப்பை ஆட்சேபித்தார். “அப்படித்தான் பேசுவேன்” என்று தன் வழக்கமான பாணியில் சொல்லி கூடுதலான எரிச்சலை ஏற்படுத்தினார் பிரதீப். “ஒருவேளை என்னை அவுட்டுன்னு சொன்னீங்கன்னா மத்தவங்க விளையாடும் போது மூஞ்சில மிளகாய்ப் பொடி ஊதுவேன்” என்று டெரராகப் பேசினார் பிரதீப். செய்யக்கூடிய ஆசாமிதான்.

திடீரென்று உரத்த குரலில் கத்தி கவன ஈர்ப்பு செய்வது சுரேஷின் கோணங்கித்தனமான பாணிகளில் ஒன்று. எனவே இந்த முறையும் அதையே செய்ய உத்தேசித்து “அய்யய்யோ.. எனக்கு இங்க விளையாட பயமா இருக்கு.. மிளகாய் பொடி ஊதுவேன்னு சொல்றாங்க. இனி என்னால இங்க இருக்க முடியாது” என்று பைகளைத் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி ஓடி சீன் போட ஆரம்பித்தார். “நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று குறும்பு செய்தார் மாயா. ‘பார்த்துப்பா. நெஜம்மாவே கேட்டை திறந்து விட்றப் போறாங்க’ என்று யாரோ கிண்டல் செய்தார்கள். பிக் பாஸ் அப்படிச் செய்யக்கூடிய கோக்குமாக்கு ஆசாமிதான்.

பிரதீப் பல அராஜகமான கொனஷ்டைகளை செய்பவர்தான் என்றாலும் பிக் பாஸ் விதிகளை மிகவும் சின்சியராக பின்பற்றுவதில் முதன்மையானவர். அப்படி தன்னை காட்டிக் கொள்வதிலும் ஊக்கமாக இருப்பவர். எனவே ‘பிரதீப் அவுட்’ என்று சுரேஷ் விளையாட்டுத்தனமாக சொன்னது அவருக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்திருக்கலாம். அதை மறுப்பது பிரதீப்பிற்கு உள்ள உரிமை. ஆனால் கெட்ட வார்த்தை பேசுவதும் மற்றவர்களை அச்சுறுத்துவது போல் நடந்து கொள்வதும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது. “நீங்க நல்ல ஆடறீங்க. ஆனா சமயத்துல யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுடறீங்க” என்று கமலும் ஏற்கெனவே எச்சரிக்கை தந்திருக்கிறார். “நான் நேர்மையா ஆடிட்டு இருக்கேன் என்னோட மணி அடிக்கவே இல்லை” என்று விசித்ராவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பிரதீப்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours