Thangalaan: “ரஞ்சித், `தேள் கொண்டு வாங்கடா!’ என்பார்” – மேக்கிங் குறித்து விக்ரம் | actro Vikaram Speech in Thangalaan teaser event

Estimated read time 1 min read

இந்நிலையில் இப்படம் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் படத்தின் மேக்கிங் குறித்தும் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் கலகலப்பாகப் பேசியிருந்தார்.

நம்ம இந்தியாவில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு, கெட்ட விஷயங்களும் இருக்கு. அதைச் சரியாக காட்டிருக்கோம். ஆங்கிலேயர் காலகட்டத்தில் சமுதாயம் எப்படி இருந்தது என்பதை ரொம்ப எளிமையாகக் காட்டி இருக்கார் ரஞ்சித். நாங்கள் செட் போட்டு எல்லாம் எடுக்கல, உண்மையா ‘கேஜிஎஃப்’ -ல் இருந்தோம். முள்ளு, பாம்பு எல்லாமே இருக்கும். செட்டில் செருப்பு இல்லாமல் பயந்து நடப்போம். ரஞ்சித் திடீரென, ‘தேள் கொண்டு வாடா’ என்று கேட்டால் உடனே தேள், பாம்பு எல்லாம் வரும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours