இதையடுத்துப் பேசிய தமன்னா, “கார்த்தியினால்தான் நான் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் இருவரும் சினிமாவின் மாணவர்கள். அனைவரையும் என்டர்டைன் செய்வதற்குப் புதுபுது கதாபாத்திரங்களை செய்து வருகிறார்” என்று கூறிய பிறகு கார்த்தியுடன் சேர்ந்து ‘அடடா மழைடா…’ பாடலுக்கு நடனமாடினார்.
“கார்த்தியை நான்தான் முதலில் பாட வைத்தேன்” என்று கூறிய யுவன் சங்கர் ராஜா, கார்த்தியுடன் சேர்ந்து பாடலைப் பாடி மகிழ்ந்தனர்.
![கார்த்தி, தமன்னா](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-10%2Ffe48e9d8-185c-4936-971a-0cf069108bab%2FF9iK6_bbEAALQ0D.jpeg?auto=format%2Ccompress)
இதையடுத்துப் பேசிய நடிகர் ஆர்யா, “கார்த்தியின் 25வது படத்திற்கு எடுத்துக்கொண்ட காலம் அதிகம். ஆனால், வெற்றி சதவிகிதம் அதிகமாகவே வைத்திருக்கிறார்.” என்றார்.
இதுதவிர ஜெயம் ரவி, விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கார்த்து குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.
+ There are no comments
Add yours