Shilpa Shetty Raj Kundra Separated Rumored To Be Divorced Soon

Estimated read time 1 min read

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு நன்று தெரிந்த பாலிவுட் முகமாக வளம் வருபவர், ஷில்பா ஷெட்டி. இவர், 1993 ஆண்டு, பாஸிகர் என்ற இந்தி படம் மூலம் பாலிவுட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அடுத்தெடுத்து நல்ல பட வாய்ப்புகள் வர, இந்தியில் உள்ள பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து விட்டார்.

தமிழ் படங்களில் நடித்த ஷில்பா ஷெட்டி:

பாலிவுட் ஹீரோயின்கள் பலர் அவர்களின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது தமிழ் மொழி படங்களிலும் நடித்து வந்தனர். அந்த நடிகைகளின் லிஸ்டில், ஷில்பா ஷெட்டியும் ஒருவர். இவர், 1996ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை என்றாலும், இவரது நடிப்பிற்கும் பிரபுதேவாவிற்கு ஈடு கொடுத்து இவர் ஆடிய நடனத்திற்கும் நன்றாகவே வரவேற்பு கிடைத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படத்திலும் “மேக்கோரீனா மேக்கோரீனா..” பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியிருப்பார். இதையடுத்து அவர் இதுவரை எந்த தமிழ் படங்களிலும் கேமியோ கதாப்பாத்திரத்தில் கூட நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தொழிலதிபரை கரம் பிடித்தார்:

நடிகை ஷில்பா ஷெட்டி, 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை கரம் பிடித்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட தொழிலில் அதிக கவனம் செலுத்தினார் ஷில்பா. ஐபிஎல் போட்டியில் தற்போது வலிமையான அணியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் உரிமையாளர் இவர்தான்.

மேலும் படிக்க | விவாகரத்து செய்த பெண்களை திருமணம் செய்து கொண்ட இந்த 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

கணவர் மீது ஆபாச பட வழக்கு:

கடந்த 2021ஆம் ஆண்டு, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்து ஆன்லைனில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையில் இருந்த அவர் அதன் பிறகு வெளியில் வந்தார். இது குறித்து பாலிவுட் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. பல இடங்களில் ஷில்பா ஷெட்டியின் பெயர் தவறாக பேசப்பட்டது. திருமண வாழ்வில் புயல்.. பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ராவின் திருமண வாழ்வில், பாலியல் பட வழக்கு விவகாரம் பெரும் புயலாக வீசியது. ராஜ், சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவர், ராஜ் குந்த்ரா சிறையில் இருந்த போதே விவாகரத்து கேட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

“பிரிந்து விட்டோம்..”

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவே ராஜ் குந்த்ரா-ஷில்பா ஷெட்டியின் விவாகரத்து குறித்த தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் ராஜ் குந்த்ரா தற்போது தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கடினமான காலத்தை கடப்பதற்கு எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் விளம்பரமா..? ராஜ் குந்த்ரா இவ்வாறு வெளியிட்டுள்ள பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ரியாக்ட் செய்துள்ளனர். ஆனால், அதில் ஒருவர் கூட “ச்சே..பாவம்” என்ற வகையில் ஒரு கமெண்டை கூட போட வில்லை. மாறாக, “இவர் பெரிய மகாத்மா காந்தி, அந்தம்மா பெரிய அன்னை தெரசா ரெண்டு பேரும் பிரிகிறார்கள், நாங்கள் சோகம் அடைய வேண்டுமாம்..உங்களைப்பத்தி யாருக்குமே இங்கே கவலையில்லை சார்..” என்று ட்வீட் போட்டு வருகின்றனர். இதனால், இந்த ட்வீட் கூட ஒரு வீண் விளம்பரத்திற்காக இருக்கலாமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours