‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’னு நீங்க இயக்குன மூணு படங்களுமே வேற வேற ஜானர்ல இருக்கும். ஆடியன்ஸுக்கு நீங்க எப்படிப்பட்ட இயக்குநராக இருக்கணும்னு நினைக்கிறீங்க..?
“எனக்குனு ஒரு அடையாளமே வேணாம்னு நினைக்கிறேன். ‘மேயாத மான்’ வந்ததுக்கு அப்பறமே நிறைய பேர் அதே டைப்ல படங்கள் பண்ணச் சொல்லி கேட்டாங்க. இப்போதும் ‘மேயாத மான்’ டைப்ல எதாவது ஒரு படம் வந்தால், ‘உங்க பலம் இதுதான். அதை திரும்பப் பண்ணுங்க’னு சொல்றாங்க. எனக்கு ‘மேயாத மான்’ படத்தை என் முதல் படமாக பண்ணணும்கிற ஐடியாவே இல்லை. ‘மது’ங்கிற ஒரு குறும்படம் எடுத்திட்டு அதைக் காட்டி சில தயாரிப்பாளர்கிட்ட என் முதல் பட கதையை சொன்னேன். என் முதல் படமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தான் நான் பண்ணியிருந்தேன். கதை கேட்ட எல்லாரும், ‘சூப்பராக இருக்கு. ஆனால், ஏன் முதல் படத்திலேயே ரொம்ப கஷ்டப்படணும்னு நினைக்கிறீங்க. நீங்க காட்டுன அந்த குறும்படம் போனதே தெரியலை. அதையே படமாக பண்ணுங்க’னு சொல்லுவாங்க. இப்படியே 2 வருஷம் நான் சந்திக்கிற 50 தயாரிப்பாளர்களும் சொன்னாங்க. சரி, அதையே பண்ணிடுவோம்னு பண்ணுனது தான் ‘மேயாத மான்’. அதே மாதிரிதான் ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களும் அமைஞ்சது. இந்தபட படங்கள் எல்லாமே எனக்கு பிடிச்சுத்தான் பண்ணுனேன். ஆனால், இதுவரைக்கும் நான் பண்ணணும்னு நினைச்ச படத்தை பண்ணல.”
+ There are no comments
Add yours