தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருந்த ‘கார்கி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக இணையத்தில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours