1991ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சினிமாக் கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார். அவருக்குமே வயது 80-ஐ கடந்துவிட்டது.
இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை ரொம்பவே மோசமாகியதாகச் சொல்கிறார்கள். சிகிச்சைகள் எதுவும் கைகொடுக்காமல் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஷூட்டிங்கில் பாபு அடிபட்ட பிறகு, ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற அந்தப் படம் வேறொரு ஹீரோவை வைத்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆசையோடு சினிமாவுக்கு வந்த அந்த மனிதரை மொத்தமாக முடக்கிப் போட்டு, வாழ்க்கையையே முடித்தும் வைத்துவிட்டது ஒரேயொரு சண்டைக் காட்சி.
இதில் இன்னொரு ஹைலைட் என்னவெனில் தன் அறிமுகப் படமான ‘என் உயிர்த் தோழ’னில் அரசியில் கட்சித் தொண்டராக நடித்திருந்தார் பாபு. நிஜத்திலும் பாபுவுக்கு அரசியல் பின்புலம் இருந்தது. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., சபாநாயகர் எனப் பல பதவிகளிலிருந்த க.ராஜாராம் இவரது தாய்மாமா.
+ There are no comments
Add yours