தற்போது வெளியாயிருக்கும் தகவல்படி இருவருக்குமான ரகசியத் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகவும் பாபுவின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாலேயே வெளியுலகத்துக்குத் தகவல் சொல்லாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இது பற்றி தீபா மற்றும் பாபுவின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ’’ரமணன், பாபு ரெண்டு பேரும் கூட்டுக் குடும்பமா வசிச்சு வந்தாங்க. பாபுவுக்குத் திருமணம் ஆகாம இருந்தது. அவர் தீபாவுடன் பழகியது ரமணனுக்குப் பிடிக்கலை. அதனால இந்தக் கல்யாணத்தை அவங்க வீட்டுல விரும்பலை. அதனால கல்யாணத்தை எதிர்த்தாங்க. ஒருகட்டத்துல தீபாவை ‘பேசாம ஒதுங்கிப் போயிடு; இல்லாட்டி டிவியிலயே இருக்க முடியாது’னு பாபு வீட்டுத் தரப்புல இருந்து மிரட்டியதாகவும் சொல்லப்படுது. ஆனாலும் இப்ப எல்லா எதிர்ப்புகளையும் மீறி இந்த ஜோடி கல்யாணம் செய்திட்டிருக்காங்க’’ என்கின்றனர்.
தீபாவை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
“ஆமா சார். கல்யாணம் ஆகிடுச்சு. பதிவுத் திருமணமா பண்ணிக்கிட்டோம். மத்த விஷயங்களை நான் பிறகு பேசறேன்” என முடித்துக் கொண்டார்.
+ There are no comments
Add yours