I am writing story for Kamal film: Pa. Ranjit information

Estimated read time 1 min read

கமல் படத்துக்கு கதை எழுதி வருகிறேன்: பா.ரஞ்சித் தகவல்

4/9/2023 12:37:43 AM

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் பங்கேற்றார். அவரிடம், வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு தூத்துக்குடியில் வன்முறை நடந்ததாக கூறிய ஆளுநரின் கருத்து குறித்து கேட்டதற்கு அவர் கூறியது: கவர்னர் அவருக்கான வேலையை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்து வருகிறார் என நினைக்கிறேன். இது ஒரு மோசமான விஷயம். எந்த தகவலின் அடிப்படையில் அவர் பேசுகிறார். பொது சமூகத்தில் இப்படியான பேச்சை பேசி சர்ச்சை ஏற்படுத்துகிறார். கவர்னரின் இத்தகைய பேச்சை ஏற்றுகொள்ள முடியாது. ரோகினி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் இது மட்டும்தான் தற்போது தெரியவந்துள்ளது. மால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழங்குடியின மக்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அரசுதான் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎஃப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும் என நினைக்கிறேன். கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். கமலுக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு பா.ரஞ்சித் கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours