கழன்று ஓடிய அரசு பஸ்ஸின் சக்கரங்கள்..!

Estimated read time 0 min read

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.15 மணி அளவில் 6 ஏ அரசு டவுன் பஸ் பாசூருக்கு சென்று கொண்டிருந்தது. ஊஞ்சலூர் சோளாங்காபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென பஸ்சின் முன்பக்க 2 சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டன. இதனால் பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது.

அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த 8 பயணிகளும் எந்த விதமான காயங்களும் இன்றி உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து கண்டக்டர் மணி மாற்று ஏற்பாடு செய்து 8 பயணிகளையும் அனுப்பி வைத்தார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours