இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில், விருது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் படைப்பான ‘All that Breathes’ விருதினைத் தவறவிட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் ‘Navalny’ என்ற படைப்பு வென்றிருக்கிறது.
விழாவினைத் தொடங்கி வைத்த ஜிம்மி கிம்மல், மேடையில் யாரேனும் அதிக நேரம் பேசினால் அவர்களை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆடியவாறே வரும் நடனக்குழுவினர், அப்படியே வெளியே அழைத்துச் சென்றுவிடுவர் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார். ரெட் கார்பெட் நிகழ்வில் இடம்பெற்றிருந்த தீபிகா, கறுப்பு நிற உடையில் நடந்துவந்து அனைவரையும் கவர்ந்தார்.
+ There are no comments
Add yours