ஹைதராபாத்: படப்பிடிப்பின்போது நடிகை சமந்தாவுக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது இரண்டு கைகளிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘ஏ மாய சேஸாவே’ படத்தில் அறிமுகமானவர் சமந்தா. இது தெலுங்கு மொழியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையாகும். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். உச்ச நடிகர்களுடன் கதையின் நாயகியாக நடிப்பவர் தனது திரைப் பயணத்தில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
+ There are no comments
Add yours