தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது 8 வயதிலேயே பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பெரியவரான பிறகும் சில பாலிவுட் படங்களில் நடித்தவர், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமானார். தற்போதுவரை தென்னிந்திய மொழிப்படங்களில் அதிகமாக நடித்துள்ள ஹன்சிகா, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன் நண்பரான சோஹைல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அவரின் கரியர், காதல், கல்யாணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற டாக்குமென்ட்ரி சீரிஸில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் கடந்த வாரம் தனது திருமணம் குறித்துப் பேசினார்.

தனது தோழியின் காதலனைப் பறித்துக்கொண்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்தார். தற்போது வேறு ஒரு பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தவர் எப்படிக் குறுகிய கால இடைவெளியில் (2003 – 07 – 4 வருடங்கள்) இந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தார் என்ற கேள்வி அவர் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானபோதே எழுந்தது. ஹன்சிகா வேகமாக வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று பல பத்திரிகைகள் செய்தி வாசித்தன. இந்த வதந்தி குறித்து தற்போது ஹன்சிகா தனது தாயாருடன் சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.
+ There are no comments
Add yours