முதற்பாதியில், ஒரு ட்ராவல் பேக்கில் ‘ரகசியத்தை’ வைத்துக்கொண்டு, பாலாஜி ஒவ்வொரு இடமாகப் பதற்றத்துடன் அலைவதும், ஆங்காங்கே அவருடன் இணையும் சிறிய கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதி, ஒரு த்ரில்லர் நாவலுக்கான டெம்ப்ளேட்டுக்குள் அப்படியே பொருந்திப் போகிறது. ஆனால், அதுவும் ஏற்கெனவே வாசித்து முடித்த நாவலின் உணர்வைத் தருவதுதான் சிக்கல்.
கதையின் நாயகன் ஒவ்வொருவரையும் சென்று விசாரிப்பது, தன் குற்றவுணர்ச்சியால் ஹீரோ அவதாரம் எடுப்பது எனப் பழக்கப்பட்ட காட்சிகளே நிறைந்திருக்கின்றன. திரைக்கதை பரபர என நகர்ந்தாலும், கூடவே ஆயிரம் கேள்விகளும் பின்தொடர்கின்றன. அதிலும் பிரச்னையிலிருந்து தப்பிக்க பாலாஜி எடுக்கும் முடிவுகள் படு செயற்கைத்தனம்.
தன்னை ஒரு சாமானியன் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பாலாஜி, இரண்டாம் பாதியில் மட்டும் எப்படி புலனாய்வு புலியாகிறார், காவல்துறை ஏன் இவ்வளவு சுமாரான ஐடியாக்களை மட்டுமே யோசிக்கிறது, ஒரு காவலரை ஒரே நாளில் பணி மாற்றம் செய்யும் அளவுக்குப் பலம் பொருந்திய வில்லன் க்ரூப், ஏன் சாதாரண பாலாஜியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது எனப் படம் முழுவதுமே கேள்விகள் எழுந்தவாறு உள்ளன.
+ There are no comments
Add yours