கமல்ஹாசன் நடிப்பின் அம்சங்களில் அக்கறை காட்ட, ரஜினிகாந்த தன் ஸ்டைலால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். ரஜினி, எம்.ஜி.ஆரின் பாணியைப் பின்பற்றிப் போக, கமல் நடிப்பு ராட்சசன் என்ற அவதாரம் எடுத்தார். விஜய், அஜித்துக்கு இப்படிப்பட்ட அவதாரங்களைக் காட்ட முடியாதது, ஒருவகையில் அவர்கள் இரண்டு பேருக்குமே வசதியாக இருந்தது எனலாம்.
ஆரம்பத்திலிருந்தே ஸ்டைலில் கவனம் செலுத்தி வந்த ரஜினியை கலைஞானம்தான் கவனித்து வந்தார். அவரை ஒப்பந்தம் செய்து ‘பைரவி’ படத்தை ஆரம்பிக்க எண்ணியபோது ரஜினியே அதை நம்பவில்லை. ”ஏதாவது வில்லன் வேடம் கொடுங்கள். என்னை ஹீரோவாக்க வேண்டாம்!” என அவரே கேட்டுக் கொண்டார். அந்த வகையில் அவரை ஹீரோ மெட்டீரியலாக முதலில் உணர்ந்தது கலைஞானம்தான். அதை இன்றளவும் மறந்துவிடாமல் அவருக்காக நகரின் பிரதான இடத்தில் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தார் ரஜினி.

+ There are no comments
Add yours