“சல்மான் கானைச் சந்தித்த பிறகுதான் ஏதோ நடந்திருக்கவேண்டும்” – நடிகை ராக்கி சாவந்த் |Actor Salman Khan who spoke to Rakhi Sawant’s husband goes viral

Estimated read time 1 min read

நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று ராக்கி சாவந்த்துடனான தனது திருமணத்தை அடில் முறைப்படி அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ராக்கியுடனான திருமணத்தை மறைக்கவில்லை. திருமணத்தை அறிவிப்பதில் தாமதம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இது குறித்து இருவரும் முறைப்படி பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். ராக்கி சாவந்த் அளித்த பேட்டியில், “எனது சகோதரர் பாய் (சல்மான்கான்) என் கணவர் அடில் கான் துரானியை சந்தித்துப் பேசினார். எனது பாய் என் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்துகிறார். பாய் எனது கணவருக்கு நிச்சயம் போன் செய்திருக்கவேண்டும். என் சகோதரன் சல்மான் கானின் சகோதரியான என் திருமணத்தை மறுக்க முடியுமா? சல்மான் கானை சந்தித்த பிறகுதான் ஏதோ நடந்திருக்கவேண்டும். சல்மான் கான் தான் எனது திருமணத்தை காப்பாற்றிக்கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours