சிக்கன் கடையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி..!

Estimated read time 1 min read

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி பகுதியில் சேர்ந்தவர் சதாம் (27). இவர் பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கன் கடை நடத்தி வந்தார் இவர் வழக்கம்போல் கடைக்கு சென்று சிக்கன் வியாபாரம் செய்தார்.

மீண்டும் மாலையில் கோழியை அறுத்து சுத்தம் செய்வதற்கு இயந்திரத்தில் செலுத்தும்போது இயந்திரத்தில் இருந்து சதாமை மின்சாரம் தாக்கியது அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர் இது தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours