பணத்தை வாரி இறைத்த ஏடிஎம்; மக்கள் குவிந்ததால் பரபரப்பு..!

Estimated read time 1 min read

மகாராஷ்டிர:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அடுத்த கபர்கெடாவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

500 ரூபாய் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு 2500 ரூபாய் கிடைத்ததால், இதனை அறிந்த மக்கள் அங்கு குவியத்தொடங்கினர்.

வங்கிக் கணக்கு வைத்துள்ள ஒருவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தபோது ஏடிஎம் தற்காலிகமாக மூடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இயந்திரத்தில் ரூ.100 விநியோகிக்க வேண்டிய தட்டில் தவறுதலாக ரூ.500 வைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே இந்த தவறு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

                                                                                                                            -Maharaja B

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours