அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்..!

Estimated read time 0 min read

சென்னை:

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடைந்தது. இதன் இரண்டாவது பகுதி ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இன்று அவை நடவடிக்கையில் துரைமுருகன் பங்கேற்கவில்லை. இதனிடையே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours