திருப்பதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு தரிசனம்..!

Estimated read time 1 min read

திருப்பதி:

திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தரிசனம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இன்று (சனிக்கிழமை) முதல் தரிசனம் செய்யலாம். தினமும் காலை 10 மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 1-ந் தேதியே இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ( ஏப்ரல் 8) டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours