மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா!

Estimated read time 0 min read

நடிகர் சூர்யா த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. மேலும், ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் தேர்வாகி இருக்கிறது. அடுத்ததாகபாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படமும் முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து ‘சூரரைப்போற்று’ இயக்குநர் சுதா கொங்கராவுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் பலரது பாராட்டுகளையும் பெற்று ஆஸ்கர் விருதுகள் வரை சென்றது. இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா கைவசம் இருக்கிறது. தொடர்ந்து சிறுத்த’ சிவாவுடனும், சுதா கொங்கராவுடன் அடுத்த படம் இணைய இருப்பதாக சூரியா தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோன்று சமீபத்தில் இயக்குநர் பாலாவுடன் ‘நந்தா’ படத்திற்கு பின்பு 20 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய இருப்பதாக சூர்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours